×

பெரணமல்லூர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க 12 மின்கலன் வண்டிகள்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் முதற்கட்டமாக குறிப்பிட்ட கிராமங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க 12மின்கலன் வண்டிகளை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார். தூய்மைபாரத இயக்கதிட்டத்தின் கீழ்கிராமப்புறங்களில் தூய்மையை கருத்தில் கொண்டும மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலதிட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூய்மை பாரத இயக்க திட்டத்தில் பெரணமல்லூர் பகுதியில் முதல்கட்டமாக கொழப்பலூர், கெங்காபுரம், நெடுங்குணம் நமத்தோடு, கோட்டுப்பாக்கம், அரசம்பட்டு, மேலானூர், மேலத்தாங்கல், நம்பேடு, வல்லம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து வர மின்கலன் பொருத்திய மூன்றுசக்கர வண்டிகளை வழங்க தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தலா ₹2.48 லட்சம் மதிப்புள்ள 12 மின்கலன் வண்டிகள் வந்தது. தொடர்ந்து, இந்த மின்கலன் வண்டிகளுக்கு உதிரிபாகங்கள் பொருத்தி குறிப்பிட்ட கிராமங்களுக்கு மின்கலன் வண்டிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு வண்டியினை வழங்கினார். நிகழ்ச்சியில் பிடிஓ மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரணமல்லூர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க 12 மின்கலன் வண்டிகள் appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Peranamalore ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் டிஇஓ ஆய்வு பெரணமல்லூர் வட்டார